கொல்கத்தா, மே 24- மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் விரைவில் இயல்பு நிலையை கொண்டு வர மீட்பு, நிவாரண பணிகளுக்கு ராணுவத்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது. இதேபோன்று, ரயில்வே, கொல்கத்தா துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்களின் உதவியையும் மேற்கு வங்க அரசு நாடியிருக்கிறது.